பௌத்த மத ஆக்கிரமிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க உதவிய மனோ கணேசனுக்கு வடக்குக் கிழக்கு தமிழர்களின் நன்றிகள்!

கன்னியா வெந்நீரூற்று இ நீராவியடி பிள்ளையார் ஆலயம்இ கந்தப்பளை முனியாண்டி கோயில்களை பௌத்த மயமாக்கி,புத்தவிகாரைகளைக் கட்டும் சிங்கள பேரினவாதிகளின் முயற்சிகளைத் தடுக்கும் வகையில்  அமைச்சர் மனோ கணேச னின் எடுத்த முயற்சியின் காரணமாக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழ்ககிழமை காலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைசசர்களான மனோகணேசன், ப.திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், எம்.திலகராஜ், வேலு குமார், ஆகியோரும்,
தொல்பொருள் ஆராயச்சித் திணைக் களப் பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் அமைச்சர் மனேகணேசனின்  சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.


இதில் பின்வரும் தீரமானங்களை நடைமுறைப் படுததுவதான உத்தரவை  ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் ; மனோ கணேசன் தனது முகநூலில் பதிவு  செய்து ளளார் வாக்குறுதியிளதியளித்துள்ளார்
1. கன்னியாவில்  புதிய பௌத்த விகாரைக் கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்துதல்

2. 32 பேர் கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற  சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப் படுதல்.

3. இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புட னேயே எதிர்காலத்தில்  புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் மனோ கணேசன் அவர்களே  அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிப்பார்.

4. கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதைத் தடைசெய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்தத் திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்களப் பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடைசெய்ய வேண்டும்.

5. கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிக்க, தொல்பொருளாராய்ச்சி  திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால்,அவற்றை அந்தப் பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகின்றார். இந்தநிலையில், வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிப்பது யாரெனத் தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தைக் கூட்டுவார்

6. முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அங்கு விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்குப் புறம்பானது என தொல்பொருளா ராய்ச்சி  திணைக்களப் பணிப்பாளர் ஏற்றுக் கொண்டார்.

7. மலையகத்தின் கந்தப்பளை – கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விகாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தைக் கையில் எடுப்பது பிழை. இந்தப் பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்ததாக மனோகணேசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக் கும் அவசர கூட்டம் தொடர்பில் தகவல் அனுப்பியும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் குறிப்பாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவதவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட  எவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. இதற்கான காரணம் தெரியவரவில்லை எனவும் அமைச்சர் மனோ கணேசன்தனது முகநூலில் இன்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக ஜனாதிபதி வழங்கிவருகின்ற வாக்குறுதிகளை அடிக்கடி மறந்து விடுபவர் என்ற வகையில் இவற்றையும் அவ்வாறே மறந்து விடாது செயல்படுத்தும்  வகையில் அமைச்சர் மனோ கணேசன் செயற்படவேண்டும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.