குளியாப்பிட்டியவில் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் உயிரிழப்பு!!

குளியாப்பிட்டி – எபலதெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கொமுகொமுவ – எபலதெணிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சமன் சந்தன எனப்படும் பெலெக் சமன் என்பவரே உயிரிழந்துள்ளார்

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 8.10 மணியளவில், வானில் வந்த சிலரால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்தவரை குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.