மலையகத்தின் முதல் பேராசிரியர் காலமானார்!!

மத்திய மாகாணம், மலையக சமூகத்தின் முதல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி காலமானார்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கண்டியில் உள்ள ரங்கல பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.

தலவாக்கலை சிரேஷ்ட அரசாங்க பாடசாலையில் தரம் ஐந்திலிருந்து சாதாரண தரம் வரை படித்துள்ளார். பின்பு இவரது கல்விப் பயணம் பிரித்தானியா வரை தொடர்ந்துள்ளது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்பதை பொருளியல் மற்றும் சமூக ஆய்வுகள் மூலம் ஆரம்ப காலங்களில் நிரூபித்தவர். ஆனால், அதை எவரும் கண்டு கொள்ளவில்லை.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதி கிரியை பொரளை கனத்தையில் நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.