உயிர் பிரியும் நேரத்தில் தங்கையைக் காப்பாற்றிய 5 வயதுச் சிறுமி!!
சிரியாவில் அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றது. இதனால் பொதுமக்கள் நூற்றுக்கணக்காக உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், விமானத் தாக்குதல் ஒன்றில், அகப்பட்டு இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
கடந்த புதன்கிழமை இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து அரச படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்களது 5 வயது மகள் ரிஹாம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அந்தநிலையில், இடிபாடுகளில் சிக்கிய தனது 7 மாத தங்கையான துகா கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் காயங்களுடன் உயிர் தப்பியது.
ஆனால், தங்கையைக் காப்பாற்றிய சிறுமி ரிஹாம் பரிதாபமாக உயிரிழந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இந்நிலையில், விமானத் தாக்குதல் ஒன்றில், அகப்பட்டு இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
கடந்த புதன்கிழமை இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து அரச படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்களது 5 வயது மகள் ரிஹாம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அந்தநிலையில், இடிபாடுகளில் சிக்கிய தனது 7 மாத தங்கையான துகா கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் காயங்களுடன் உயிர் தப்பியது.
ஆனால், தங்கையைக் காப்பாற்றிய சிறுமி ரிஹாம் பரிதாபமாக உயிரிழந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை