மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி!!
இராணுவ செலவினத்துக்கான நிதியைப் பயன்படுத்தி அமெரிக்காவின் தெற்கு எல்லையில் மெக்சிகோ நாட்டுக்கு இடையில் சுவர் கட்டும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் ட்ரம்ப்பின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு முறையீட்டு வழக்கிலேயே அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 250 கோடி டொலர்களைப் பயன்படுத்தி குறித்த எல்லைச் சுவரை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், 5 நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அமர்வில் ட்ரம்ப்பின் முடிவுக்கு ஆதரவாக 4 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத் தீர்ப்பை வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “கீழ் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதால், எல்லைச் சுவர் விவகாரத்தில் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு நாட்டில் நிலவும் சட்டத்தின் ஆட்சிக்கும், எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல்கள் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல்கள் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்று, அவர் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுள்ள நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். சுமார் 670 கோடி டொலர்கள் அளவிலான இந்தத் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதுமட்டுமின்றி, இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இந்த மதில் சுவருக்கான கட்டுமானச் செலவு மேற்கொள்வதற்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
இவ்விவகாரத்தை முன்வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சுமார் ஒருமாத காலத்துக்கு அமெரிக்க அரசின் செலவினங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படாமல் அரசு ஸ்தம்பித்துப் போகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் ட்ரம்ப்பின் முடிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் ட்ரம்ப்பின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு முறையீட்டு வழக்கிலேயே அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 250 கோடி டொலர்களைப் பயன்படுத்தி குறித்த எல்லைச் சுவரை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், 5 நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அமர்வில் ட்ரம்ப்பின் முடிவுக்கு ஆதரவாக 4 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத் தீர்ப்பை வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “கீழ் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதால், எல்லைச் சுவர் விவகாரத்தில் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு நாட்டில் நிலவும் சட்டத்தின் ஆட்சிக்கும், எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல்கள் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல்கள் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்று, அவர் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுள்ள நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். சுமார் 670 கோடி டொலர்கள் அளவிலான இந்தத் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதுமட்டுமின்றி, இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இந்த மதில் சுவருக்கான கட்டுமானச் செலவு மேற்கொள்வதற்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
இவ்விவகாரத்தை முன்வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சுமார் ஒருமாத காலத்துக்கு அமெரிக்க அரசின் செலவினங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படாமல் அரசு ஸ்தம்பித்துப் போகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் ட்ரம்ப்பின் முடிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை