நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்!!

நைஜீரியாவில் கிராமமொன்றில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோக தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


நைஜீரியாவின் மைடுகுரி (Maiduguri) என்ற இடத்திற்கு அருகிலுள்ள புடு (Budu) எனும் கிராமத்தில், உறவினர் ஒருவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த கிராம மக்கள் மீதே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரு சக்கர வாகனங்களில் பயங்கர கூச்சல்களை எழுப்பியவாறு வந்த தீவிரவாதிகள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் இன்னும் பலர் காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இதேபோன்று வாகனங்களில் படையெடுத்த போக்கோஹராம் தீவிரவாதிகள், கடந்த 2014ம் ஆண்டு போர்னோ மாகாணத்திலுள்ள பெண்கள் பாடசாலையிலிருந்து 276 சிறுமிகளை கடத்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.