பயணப் பொதியில் ஏவுகணை இயக்கும் கருவி!

அமெரிக்காவில் உள்ள வொஷிங்டனில் பயணி ஒருவரின் பொருட்களை சோதனையிட்ட போது அதில் ஏவுகணையை இயக்கும் கருவி ஒன்று இருந்ததை கண்டறிந்த விமான நிலைய அதிகாரிகள் அதனை கைப்பற்றியுள்ளனர்.


தான் ராணுவத்தில் பணியாற்றியதாக தெரிவித்த அந்த பயணியின் பயணப் பொதியில் ஏவுகணை இயக்கும் கருவி இருந்தமை வழமையான விமான நிலைய சோதனையின் போது கண்டறியப்பட்டது.

‘ராணுவ பணிக்காக குவைட்டில் இருந்ததற்கு அடையாளமாக பயணப்பொதியில் இருந்த பெட்டியில் ஏவுகணை இயக்கும் கருவியை, தன் வசம் வைத்திருப்பதாக’ பால்டிமோர்/வாஷிங்டன் சர்வதேச விமான நிலைய அதிகாரிகளிடம் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

ஏவுகணை இயக்கும் கருவியை பாதுகாப்பாக செயலிழக்க செய்வதற்காக அது அரசு தரப்பு தீயணைப்பு பிரிவுப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

டி.எஸ்.ஏ என்றழைக்கப்படும் அமெரிக்காவின் விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக பிரிவு இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில், ”டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த அந்த நபர் அதிகாரிகளிடம் தான் ராணுவத்தில் பணியாற்றியதாக தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

”அதிர்ஷ்டவசமாக இந்த கருவி செயலில் இல்லை. அது உடனடியாக கைப்பற்றப்பட்டு உரிய துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவர் தனது விமான பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.