சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்தயில் கைது!

தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


முஹம்மட் அப்துல் காதர் அசீம் எனப்படும் குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் என்பதுடன், நுவரெலியால் கைப்பற்றப்ட்ட பயங்கரவாதிளின் முகாமில் சஹாரனுடன் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டொர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கொலைகளின் சூத்திரதாரி தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் என்பது கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் அவருடன் தொடர்புடையவர்கள் சந்தேகத்தின் பேரில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.