தாய், மகன் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி – ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகன் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த இருவரின் சடலங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

70 வயது மதிக்கத்தக்க விஷ்ணுகாந்தி வள்ளியம்மை மற்றும் அவரது மகனான 35 வயது மதிக்கத்தக்க லிங்கேஷ்வரன் ஆகியோரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுவதால், இந்த சம்பவம் கொலையாக இருக்கலாமெனவும் உயிரிழந்த தாயின் மூத்த மகனே  தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவரென்றும் இதன் காரணமாக அவர் இந்த கொலையை செய்திருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.