மைத்திரி- ரணில் அரசுக்கு ரத்தன தேரர் காலக்கெடு!
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பாக எதுவித நடவடிக்கையையும் எடுக்காத மைத்திரி- ரணில் அரசாங்கம் 7 நாட்களில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் காலக்கேடு விதித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தீவிரவாதிகளுடன் கடந்த காலங்களில் எவ்வாறான தொடர்புகளில் இருந்தார் என்பதற்கான பல்வேறு தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.
விசேடமாக காணிகளை வழங்கியது, அரச வாகனங்களை சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினருக்கு வழங்கியது என்பன தொடர்பான தகவல்களை நாம் ஆதாரத்துடன் வழங்கியிருந்தோம்.
எனினும், இதனை மைத்திரி- ரணில் அரசாங்கம் மூடிமறைத்து, மீண்டும் அவருக்கு ஒரு மாதத்தில் அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளது.
இது மக்களின் ஆணையையும் மனசாட்சியையும் ஜனநாயகத்தையும் மீறும் ஒரு செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட இந்த அரசாங்கத்தை வெளியேற்ற, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அந்தவகையில், எதிர்வரும் 7 நாட்களில் இந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்து வெளியேறவேண்டும் என்று நாம் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக நாம் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தீவிரவாதிகளுடன் கடந்த காலங்களில் எவ்வாறான தொடர்புகளில் இருந்தார் என்பதற்கான பல்வேறு தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.
விசேடமாக காணிகளை வழங்கியது, அரச வாகனங்களை சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினருக்கு வழங்கியது என்பன தொடர்பான தகவல்களை நாம் ஆதாரத்துடன் வழங்கியிருந்தோம்.
எனினும், இதனை மைத்திரி- ரணில் அரசாங்கம் மூடிமறைத்து, மீண்டும் அவருக்கு ஒரு மாதத்தில் அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளது.
இது மக்களின் ஆணையையும் மனசாட்சியையும் ஜனநாயகத்தையும் மீறும் ஒரு செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட இந்த அரசாங்கத்தை வெளியேற்ற, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அந்தவகையில், எதிர்வரும் 7 நாட்களில் இந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்து வெளியேறவேண்டும் என்று நாம் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக நாம் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை