அரசிற்கு எதிராக போராட்டம் - விராஜ்மென்டிஸ் விவகாரம்!

தமிழர் விடுதலைக்கு குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளரான சிங்கள சகோதரர் விராஜ் மென்டிஸை பயங்கரவாதியாக சித்தரிக்கும் அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேராட்டத்தில் அந்த கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த சிங்கள சகோததரரான விராஜ் மென்டிஸை பயங்கரவாத பட்டியலுக்குள் கொண்டுவந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘இனப்படுகொலைக்கு குரல் கொடுக்கும் விராஜ் மென்டிஸ் பயங்கரவாதியா?’, ‘தமிழர் விடுதலைக்கு குரல் கொடுக்கும் விராஜ் மென்டிஸ் பயங்கரவாதியா?’, ‘நீதி வேண்டும் நீதி வேண்டும் விராஜ் மென்டிஸ்க்கு நீதி வேண்டும்’, ‘இனப்படுகொலைக்கு நீதி கோருவது பயங்கரவாதமா?’ போன்று பல்வேறு கோசங்களை எழுப்பிவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவை தலமாகக்கொண்டு சமூக செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் சகோதர மொழியைச் சேர்ந்த விராஜ் மென்டிஸ் தமிழ் மக்களுக்காக பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.