கனடாவில் சிறப்பாாக வெளியீடு செய்யப்பட்ட மூண்று நூல்கள்!!📷

கடகம் 5 ஆம் நாள் காரிக்கிழமை (யூலை20,2019)கனடா இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள கனடாக் கந்தன் கோயிலில் நடைபெற்றது.நிமிர்ந்தே எரியும் சுடர்களாய் வீழ்ந்துவிடாத வீரம் நெருப்பு விதைகளோடு செங்காந்தள் மாதஇதழ் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது.நேற்று மாலை  நடைபெற்ற எனது 3 நூல்கள் மற்றும் செங்காந்தள் இதழ் வெளியீட்டு நிகழ்வுகள் யாவும் நிறைந்த உள்ளங்கள் ஆதரவில் எழுச்சியோடு நிகழ்ந்து இனிதே நிறைவுற்றது!


தலைமை தாங்கிய பண்டிதர்  சா. வே பஞ்சாட்சரம் ஐயா, சிறப்பு விருந்தினராக தாயகத்தில் இருந்து வருகை தந்து உரையாற்றிய ஆய்வாளர் ஜோதிலிங்கம் பங்கேற்ற, ஆய்வுரைகள் வாழத்துரைகள் வெளியீட்டு உரைகள் ஆற்றிய, நிகழ்வுக்கு பரப்புரை செய்த, ஆதரவு தந்த தட்டிக் கொடுத்த அத்தனை உறவுகளுக்கும் எழுச்சிக் கலை நிகழ்ச்சி வழங்கிய செல்வங்கள், மாற்றுத் திறன் கொண்ட கலைஞர்கள், ஆவணப்படுத்திய ஊடகவியலாளர்கள், உற்சாகமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய
கனடிய தமிழ் வானொலி ஒலிபரப்பாளர்கள் வருகை தந்து நூல்கள் பெற்று ஆதரவு நல்கிய அன்பு உறவுகள், கனடா கந்தசாமி ஆலய மண்டபம் என அனைவருக்கும் நன்றிகைளை தெரிவித்தார் சிவவதனி பிரபாகரன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.