மனை­வியின் கழுத்தை வெட்டி படுகொலை­ செய்த கணவன்!!

மத்­திய கிழக்கு நாடொன்றில் இரண்­டரை வருட கால­மாக பணிப்பெண்­ணாக இருந்து வீடு திரும்­பிய மனை­வியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன், கொலைக்கு பயன்­ப­டுத்­திய கத்தி­யுடன் ஹச­லக்க பொலிஸ் நிலை­யத்தில் நேற்று சரணடைந்துள்­ள­தாக பொலிஸார் தெரிவித்­தனர்.



ஹச­லக்க என்ற இடத்­தைச்­சேர்ந்த ஸ்ரீயாணி தயா­ரட்ன என்ற 42 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயே, அவ­ரது கண­வ­ரினால் கொலை செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

கொலை செய்­யப்­பட்ட பெண்ணின் கண­வ­னான டக்ளஸ் ஒப­சே­கர என்ற 49 வயது நிரம்­பிய நபர், மனை­வியை கொலை செய்த பின்னர், அச்­ச­ட­லத்தை வீட்­ட­ரு­கா­மை­யி­லுள்ள வயல்வெளிக்கு இழுத்­துச்­சென்று, அங்கு குவிக்­கப்­பட்­டி­ருந்த வைக்­கோ­ளுடன் போட்டு தீ வைத்­துள்ளார்.

சடலம் முழு­மை­யாக எரி­யாமல் அரை­கு­றை­யாக எரிந்த நிலையிலான சட­லத்தை பொலிசார் மீட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

மத்­தி­ய­கி­ழக்கு நாட்­டி­லி­ருந்து, நாடு திரும்­பிய குறித்த பெண், நேரடி­யாக தமது வீட்­டிற்கு வராமல், கம்­ப­ளை­யி­லுள்ள தமது தாய் வீட்டில் தங்­கி­யி­ருந்து, ஒரு வாரத்­திற்கு பின் நேற்­று ­முன்­தினம் ஹச­லக்க என்ற இடத்­தி­லுள்ள தமது வீட்­டிற்கு வந்­துள்ளார்.

அதை­ய­டுத்து, கண­வ­ருக்கும் மனை­விக்­கு­மி­டையில் வாய்த்­தர்க்­கமும், வாக்­கு­வா­தங்­களும் ஏற்­பட்­டுள்­ளன. இவ் வாக்­கு­வா­தங்கள் முற்­றி­ய­தினால், ஆத்­தி­ர­ம­டைந்த கணவன், கத்­தி­யொன்­றினை எடுத்து, தனது மனை­வியின் கழுத்தை வெட்­டிக்­கொலை செய்துள்ளார்.

இது குறித்து ஹச­லக்க பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லை­ய­டுத்து, விரைந்த பொலிஸார், வீட்­டுக்­க­ரு­கா­மை­யி­லுள்ள அரை­வாசி எரிந்த நிலை­யி­லான சட­லத்தை மீட்­டுள்­ளனர். அதைத்­தொ­டர்ந்து கொலை செய்­யப்­பட்ட மனை­வியின் கணவன், கொலைக்கு பயன்­ப­டுத்­திய இரத்தம் தோய்ந்த நிலை­யி­லான கத்­தி­யுடன், ஹச­லக்க பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­புதல் வாக்­கு­மூ­லமும் அளித்­துள்ளார்.

பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்ட சட­லத்தை மகி­யங்­கனை மஜிஸ்ரேட் நீதி­பதி எஸ். கோவிந்த ஸ்தல விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்ளார். இத­னை­ய­டுத்து சட்ட வைத்­திய விசா­ர­ணை­களை மேற்­கொள்ள, மகி­யங்­கனை அர­சினர் மருத்­து­வ­மனை பிரேத அறைக்கு கொண்டு செல்­லு­மாறும், சட்­ட­வைத்­திய அறிக்­கையை சமர்­ப்பிக்­கும்­ப­டியும், நீதி­பதி பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி பணிப்புரை வழங்கினார். ஹசலக்க பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கப்பில பண்டார, மேற்படி சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.