யாழில் சிவாஜி கணேசனின்19 ஆவது நினைவு நாள் நிகழ்வு!!📷

[யாழ் .தர்மினி பத்மநாதன்]
யாழ்.இந்திய  துணைத் தூதரகத்தின்    ஏற்பாட்டில்     செவாலியர் சிவாஜி  கணேசனின்  19 ஆவது   நினைவு நாள் நிகழ்வு  இன்று [21.07.2019]  மாலை 5 மணிக்கு யாழ் தூதரக வளாகத்தில்    இடம்பெற்றது.
தூதரகத்தின் நெறிப்படுத்தலில்  எஸ்.பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  சிவாஜி கணேசனின் உருவப் படத்திட்ற்கு துணைத் தூதுவர்  k. பாலச்சந்திரன் மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து அவையோரின் அஞ்சலி நிகழ்வுடன் சிறுவன் அகரனின் '' வீர பாண்டிய கட் டப்  பொம்மன் நாடக நடிப்பும், கலைஞர்களுக்கான கௌரவிப்பும் , சிவாஜியின் திரையிசைப் பாடல்களும் இடம்பெற்றன. மேலும் .சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலையும் அவரது கலைப் பணியையும் நினைவு கூறும் வகையில் திரைத்துறைக் குறிப்புக்கள் அடங்கிய ஆவணக்குறிப்பும் திரையிடப் பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.