கன்னியாவில் பௌத்த கோவில் கட்டும் நடவடிக்கைக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்.!📷

திருகோணமலை மாவட்டம் கன்னியா புனித பிரதேசத்தில் வரலாற்றுத் தொன்மை மிக்க தமிழர்களது பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த கோவில் கட்டும் ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் போராட்டத்தில் தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதியிலிருந்து கன்னியா வெந்நீரூற்றுக்கு திரும்பும் சந்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அங்கு பொலிஸாரும் அதிரடிப்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதுடன் குவிக்கப்பட்டிருப்பதுடன் கன்னியா வெந்நீரூற்றுக்கு செல்லும் வீதியை மூடி போராட்டக்காரர்களை கன்னியாவிற்கு செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.
அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதுடன் அதிகளவான மக்கள் கன்னியா பகுதியை நோக்கி யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதேவேளை போராட்டத்திற்கு செல்பவர்களையும்இ பேருந்துகளையும் பொலிஸார் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.
இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் பிக்கு ஒருவர் பிள்ளையார் கோவிலை உடைத்து பௌத்த கோவில் கட்டுவதற்கு எடுக்கும் சட்ட விரோத முயற்சிக்கும் துணை புரிவதாக பொலீசார் செயற்படுகின்றமையானது மேலும் இனங்களுக்கு இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.