பிகில் படம் குறித்த முக்கிய தகவல்!

அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக 'பிகில்' உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். அதோடு தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார்.


ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம்  நிறுவனம் தயாரிக்கும் பிகில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, வெளியிடப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளரான  அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் விஜய் படம் குறித்த முக்கிய தகவல் இன்று மாலை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பிகில் திரைப்படத்திற்காக, விவேக் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் "வெறித்தனம்" என்கிற பாடல் உருவாகியுள்ளதாக பதிவு செய்துள்ளார். அதோடு இந்த பாடலை அமைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.