யாழ்ப்பாண வணிக மாநாடு 2019.!!

"Share Colombo" அமைப்பும்  யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றமும்  இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் "யாழ்ப்பாண வணிக மாநாடு 2019" இன் ஆரம்ப வைபவத்தின் சிறப்பு விருந்தினராக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (12) மாலை  கலந்து சிறப்பித்தார்.


"பேண்தகு அபிவிருத்தியை நோக்கிய யாழ்" எனும் தொனிப்பொருளின்கீழ்  யாழ் திண்ணை ஹோட்டலில் இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த மாநாட்டில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பதுடன்  "Global Challenges and Local Out Look" எனும் தலைப்பில் நாளை காலை இடம்பெறும் கலந்துரையாடலில் கௌரவ ஆளுநருடன் இணைந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.