இலங்கை தமிழர் ஒருவர் நெதர்லாந்தில் கடலில் பலி!
அந்நாட்டு ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கி அவர் இழுத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில், கடற்பாதுகாப்பு பிரிவினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை