தலதா மாளிகை நுழைவாயிலில் சோதனைச் சாவடி!!

கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு தலதா மாளிகைக்குள் நுழையக்கூடிய அனைத்து நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


குறித்த சோதனைச் சாவடி, 600 மில்லியன் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எசல பெரஹெர இடம்பெறும் நாட்களில் சிறப்பு அதிரடி படையினர் உட்பட 7 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

எசல பெரஹெரவை முன்னிட்டு கண்டி நகரின் பாதுகாப்பு குறித்த விசேட கலந்துரையாடலொன்று பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.