வெளிவாரி பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!!

திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.


கிண்ணியா டாக்டர் ஹில்மி நட்பு பூங்காவின் முன்றலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களது கோசங்களை எழுப்பியிருந்தார்கள், வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்காதே, அரச நியமனத்தில் பட்டதாரிகளுக்கு உள்வாரி வெளிவாரி என பாகுபாடு காட்டாதே உட்பட "பிரிவினையின் வித்தான ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசே வெளிவாரி பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கு " என்ற பிரதான பதாகைகளை அடங்கிய சொற்களை ஏந்தியவாறும் வெளிவாரி பட்டதாரிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.

தங்களுக்கான நியமனங்களை விரைவாக வழங்கக் கோரியும் பட்டதாரிகளுக்கு பாகுபாடு காட்டாமல் இந்த ஆளும் அரசாங்கம் நியமனங்களை வழங்க வேண்டும் என கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்கள்.

இதில் ஆண்,பெண் வெளிவாரி பட்டதாரிகள்,உயர் தேசிய டிப்ளோமாதாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கோசங்களை எழுப்பியிருந்தார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.