பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் கைகலப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.


கடந்த திங்கட்கிழமை இரண்டாம் மூன்றாம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த முரண்பாடு இன்று வரை நீடித்த நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு வெளியில் கைகலப்பில் ஈடுபட்டனர். அங்கிருந்த இராணுவத்தினர் மோதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோதலை தனது தொலைபேசி படம் எடுத்த பொதுமகன் ஒருவரை, சிங்கள மாணவர்கள் சிலர் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். இதன்போது அவரை கடுமையாக எச்சரித்ததுடன் எடுத்த படங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இதேவேளை, யாழ்ப்பாணம் பரமேஸ்வராச்சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்த சிங்கள மாணவர்கள் சிலர் அங்கும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியில் மோதல் ஏற்பட்டமையினால் அதில் தலையிட யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.