வவுனியாவில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்!

வவுனியாவில் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


வவுனியாவின் பல பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) மதியம் திடீரென கடும்காற்று வீசியது.

இதனால் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளத்தில் ஒரு வீடும் பெரிய புளியாளங்குளத்தில் ஒரு வீடும் முதலியார் குளத்தில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

அத்துடன், வவுனியா வடக்கு மன்னகுளத்தில் ஒரு வீடும் நெடுங்கேணி வடக்கில் ஒரு வீடும் என மொத்தமாக 6 வீடுகளின் கூரைப் பகுதிகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன், பல இடங்களில் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் ஏ-9 வீதி தேக்கவத்தையில் மரம் முறிந்து விழுந்து கார் ஓன்றும் சேதமடைந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.