மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!

கல்முனை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்றுடன் மீன்லொறி ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.


கல்முனை மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் தனியார் பேருந்து ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ஒல்லிக்குளம் கிராமத்தின் பிரதான வீதியில் தனியார் ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றி அவ்விடத்தில் ஊழியர்களை இறக்கிவிட்டு தரிப்பிடத்துக்கு திரும்புகையில் மறுபக்கம் மீன் ஏற்றிக்கொண்டு மட்டக்களப்புக்கு விரைந்த சிறியரக லொறி மோதிக்கொண்டதனால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதனால் மீன்லொறியில் சென்றவர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்து சாரதிகளின் கவனயீனமே காரணமென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விடயமாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.