என்_தனிமையின்_துணைகள் .. கவிதை!

இரவு கொண்ட
பெரும் நிசப்தம்


காற்றோடு இலைகளுரசும்
மெல்லிசை

இரைச்சலற்ற
பிராதான சாலை

உறங்கி கொண்டிருக்கும்
தெருவிளக்குகள்

பசியோடு அலையும்
நாய்க்குட்டி

சுருண்டு கிடந்திடும்
சாலையோர குடிமகன்

நிரம்பி வழியும்
குப்பை தொட்டி

இறுதியாக புகைந்து கொண்டிருக்கும்
சிகரெட் துண்டு

கவிழ்ந்திருந்து ஆடிக்கொண்டிருக்கும்
நெகிழி கோப்பை தேநீர்

ரசிக்க யாருமின்றி ஒலித்து
கொண்டிருக்கும் இரவுப்பாடல்கள்

கூட்டங்களின்றி பயணித்திடும்
நடுச்சாம பேருந்து

உறக்கத்தில் தேம்பியழும்
ஒரு குழந்தையின் பசி

நாணய சத்தங்கள் அடங்கிபோயிருந்த
யாசகனின் அலுமினிய தட்டு

மூச்சு காற்று முடங்கி கிடக்கும்
சுரங்க நடைபாதை

யாருமற்ற
மொட்டைமாடி வெளி

உடைந்து விழும் அளவிற்கு
தேய்ந்திருக்கும் இறுதிநாள் நிலா

துணை தொலைத்த
ஒரு பூனையின் அழுகுரல்

அத்தோடு
நீ இன்றி நிழலாடும்
உன் நினைவுகள்
இவ்வளவு தான்
உறக்கம் தொலைத்து
விழித்திருந்து நான் கடத்தி
கொண்டிருக்கும்

#என்_தனிமையின்_துணைகள் ..!

- கதிர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.