நடிகை ஆண்ட்ரியா மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளாராம்!!

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா மன அழுத்தத்தில் இருந்து மீண்டுள்ளதாக கூறியுள்ளார்.


சமீபகாலமாக சினிமாவை விட்டு விலகி ஆண்ட்ரியா, தற்போது ஓய்வெடுத்த காரணங்களை இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த பதிவில் கூறியுள்ளதாவது, ”எனக்கு இருந்த மன அழுத்தம் உடல் மற்றும் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு சில காலம் விலகி இருந்தேன். பிரச்சினைகளில் இருந்து விடுபட ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். கோபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த எனக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது எளிதான காரியமாக தெரியவில்லை.

ஆனாலும் மருத்துவ சிகிச்சையில் பல சிரமங்களுக்கு மத்தியில் என்னை ஈடுபடுத்தினேன். காலையில் ஒரு கப் மூலிகை தேநீர் அருந்திவிட்டு யோகா செய்து அன்றைய நாளை தொடங்கினேன். இந்த சிகிச்சை முறை பலவீனமான இதயம் உள்ளவர்களால் கடைப்பிடிக்க முடியாது. நான் சிகிச்சையின்போது அங்கிருந்து வெளியேறி விட நினைத்தேன்.

ஆனாலும் அந்த உணர்வில் இருந்து மீண்டு மருத்துவர்கள் ஆலோசனையை பின்பற்றி நடந்தேன். இப்போது என்னை புதியவளாக உணர முடிகின்றது” என அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.