மீன் பிடிக்கச் சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள குமரி குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் வழமைபோன்று நேற்று மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இரவு வீடு திரும்பாத காரணத்தால் அவரை தேடும் முயற்சியில் அயலவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை குமரி குளத்திலிருந்து குறித்த நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

செல்வபுரம் வவுனிக்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா சுரேஷ்வரன் (35 வயது) என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.