வர்த்தக நிலையத்தில் தீ -பொருட்கள் சேதம்!!

யாழ். சாவகச்சேரி – மடத்தடி சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், குறித்த விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.


குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையார் நேற்று (புதன்கிழமை) இரவு வெளியில் சென்றிருந்த நேரம் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதிலும் விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதன் காரணமாக 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய பொருட்கள் நாசமாகியுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலுக்கான  காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.