சீரற்ற வானிலை - மக்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


நாட்டின் பல இடங்களில் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதனால், மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது என அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சின் காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்தவகையில் தற்போது தெஹிவளை, மாலபே, ஹோமாகம, கொஸ்கம, புத்தளம், நிகவரட்டிய, தம்புள்ளை ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

குறித்த பகுதிகளில் மீண்டும் மின்சாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாகவும் விரைவில் மின்சாரத்தை வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி மாத்தளையில் 25 வீடுகளும், தம்புள்ளையில் 28 வீடுகளும் ஹத்பொடியவத்தை மற்றும் நரஹன்பிட்ட பகுதிகளில் சுமார் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.