சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்!

இந்திய முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார்.


திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் காலமானார்.

இந்நிலையில் அவரது இழப்பு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரி, “இந்தியா-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஒரு தலைவரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு வருத்தமளிக்கின்றது. சுஷ்மா சுவராஜ்  இலங்கையின் உண்மையான ஒரு நண்பர்.

மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதன் மூலம் அரசியலிலும் இராஜதந்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த முத்திரையை சுஷ்மா சுவராஜ் பதித்திருக்கிறார்” என ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.