கட்டுநாயக்காவில் தரையிறங்க வேண்டிய சர்வதேச விமானங்கள் மத்தளவுக்கு மாற்றம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் அவசரமாக , மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளன.


இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தோஹா கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த கிவ்.ஆர்.-662 ரக விமானமும், சவூதி அரேபியாவிலிருந்து வந்த எயார் அரேபியா ஜி-9503 ரக விமானமும் இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு மாற்றி அனுப்பிவைக்கப்பட்டன.

இந்நிலையில் கட்டுநாயக்க பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.