தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது லிந்துலை ஹென்போல்ட் தோட்டம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹென்போல்ட் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக வீடொன்று சேதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த தீ விபத்து காரணமாக வீட்டின் மூன்று அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், தளபாடங்கள், உடைகள், அத்தியாவசிய ஆவணங்கள், சீருடைகள் என அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தீ பரவல் ஏற்பட்டபோது, அந்த வீட்டில் தந்தையும் மகனும் இருந்துள்ளனர். எனினும் அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லையென தெரிவித்த பொலிஸார், அவர்கள் தற்போது, அயலவர்களின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள லிந்துலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.