பெரமுனவில் வேட்பாளர் தெரிவில் இழுபறி இல்லை – ரோஹித!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இழுபறி நிலை இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.


ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே இவ்வாறு குழப்பநிலை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினுள் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் தலைவருக்கும் பிரதித் தலைவருக்கும் இடையே போர் உருவாகியுள்ளதாகவும் ரோஹித இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை பொதுஜன பெரமுன நாளை அறிவிக்கவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. எனினும் ஐ.தே.க.வில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் சஜித்தை வரவேற்கும் நிகழ்வொன்று நாளை மறுதினம் பதுளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.