சட்டவிரோத இறால் பிடியில் ஈடுபட்டவர்கள் கைது!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் சட்டவிரோதமாக இறால் பிடியில் ஈடுபட்ட 6 பேர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


இரணைமடுக் குளத்தில் இன்று (சனிக்கிழமை) பகல் 7 பேர், தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி இறால் பிடியில் ஈடுபட்ட நிலையில், இரணைமடு நன்னீர் மீனவர் சங்க அங்கத்தவர்கள் இவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களில் ஒருவர் 13 வயது சிறுவன் என்பதால் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ இறால் மற்றும் தங்கூசி வலை என்பவற்றுடன் உள்ளுர் கட்டுத்துவக்கும் கைப்பற்றப்பட்டதுடன், அவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவர்களை, விசாரணையின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரணைமடுக் குளத்தின் நீர் தற்போது வற்றியுள்ள நிலையில் இவ்வாறான சட்டவிரோத மீன், இறால் பிடியினால் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி நன்னீர் மீன்பிடியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.