யாழில் 11 வயது சிறுவன் பலி !

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.


சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளான்.

சம்­ப­வம் தொடர்பில் தெரியவருகையில் ,

கடந்த 24ஆம் திகதி வீட்­டில் கட்­டப்­பட்­டி­ருந்த இரு கயிற்­றைப் பிடித்து சிறு­வன்
விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தபோது அவ­னது தாயார் விளை­யாட வேண்­டாம் என்று
அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

அதன் பின்­னர் தாயார் மதிய உணவு தயா­ரிப்­பில் ஈடு­பட்­டு, சிறிது நேரத்­தில்
சிறு­வனை அழைத்­த­போது அவ­னது சத்­தத்­தைக் காண­வில்லை என சிறுவன் விளை­யா­டிய
இடத்­தில் சென்று தேடி­யுள்­ளார்.

இதன்­போது சிறு­வ­னது கழுத்­தில் கயிறு இறு­கி­யி­ருப்­பதை கண்டு பதறிய தாயார்,
உட­ன­டி­யாக தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னைக்கு எடுத்­துச் செல்லப்பட்டு, பின்னர்
சிறு­வனை மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பாண போதனா மருத்­து­வ­ம­னை­யில்
அனுமத்தித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பய­னின்றி சிறு­வன் நேற்று உயி­ரி­ழந்­துள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.