டிஎன்பிஎல்: மதுரை, சேப்பாக்கம் அணிகள் வெற்றி!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டங்களில் மதுரை பேந்தர்ஸ் அணியும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.


தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது ஆட்டத்தில் நேற்று (ஆகஸ்டு 2) மதுரை பேந்தர்ஸ் அணியும் கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. துவக்க ஆட்டக்காரரான அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி அதிரடி சதம் அடித்தார். ஜெகதீசன் கவுசிக் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். கோவை அணி தரப்பில் அஜித் ராம் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியால் கடைசி வரை போராடி 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மதுரை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாகப் பந்துவீசிய செல்வ குமரன் 4 விக்கெட் வீழ்த்தினார். சதம் விளாசிய அருண் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நேற்றைய தினத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய சேப்பாக்கம் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 53 ரன்களும், கவுசிக் காந்தி 50 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய காஞ்சி வீரன்ஸ் அணி 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சேப்பாக்கம் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஞ்சி அணியின் ராஜகோபால் சதீஷ் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். சேப்பாக்கம் அணி தரப்பில் ஹரிஷ் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். அரைசதம் விளாசியதோடு 4 விக்கெட் வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹரிஷ் குமாருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.