தத்தையே....நீ வித்தையே- கவிதை!!

தங்க நிலவொன்று தரையிறங்கியதே.
தத்தையாய் மாறி திரிகின்றதே
விழிகளிலே வித்தை காட்டி எனை ஈர்க்குதே..
அழகினிலே அனுதினமும் எனை வாட்டுதே.


வண்ணமில்லா வானவில்லாய் நடமாடுதே
கள்ளமில்லா அவள் சிரிப்பு எனை தாக்குதே
உள்ளமெல்லாம் அவள் வாசம் தினம் வீசுதே
அவளோடு பேசிட மனம் ஏங்குதே.

சொல்லி சொல்லி தீரவில்லை அவளென்ற போதையை.
வச்ச கண் வாங்காமல் பார்க்கிறேன் அவள் சென்ற பாதையை
அவள் சொன்ன வார்த்தையெல்லாம் சீதை சொன்ன புதிய கீதையே.
அழகென்ற பட்டப்படிப்பில் அவள் மேதையே.

சலசலக்கும் ஐந்தருவி அவள் கூந்தலானதோ.
அவள் கூந்தலில் குடியேற தென்றல் வந்ததோ
வரம் பெற்றும் தவமிருக்கும் மலர்கள் என்ன பாவம் செய்ததோ.
வஞ்சி உன்னை நனைத்த மழை மோட்சமானதே.

கெஞ்சி கெஞ்சி கேட்குதடி தேனினமே
அஞ்சி அஞ்சி பேசுதடி ஆணினமே..
துள்ளி நீயும் ஓடுகிறாய் மானினமே
காத்திருக்கிறது உனக்காக என் மானுடமே.

காத்திருக்கிறது உனக்காக என் மானுடமே

மீராசதிஷ்✍
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.