வடக்கு கிழக்கில் தீவிரமடையும் மதவாதம்!!
வடக்கு – கிழக்கில் இந்து சமயத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கில் பௌத்தமயமாக்கல் வேகமாக இடம்பெறுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறை காட்டவில்லை. ஒரு சில விடயங்களைச் செய்திருந்தாலும், பௌத்த மயமாக்கலைத் தடுக்க காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இவ்வாறு இந்து அமைப்புக்கள் குற்றஞ் சுமத்தியுள்ளன.
நல்லை ஆதீனத்தில் அண்மையில் இந்து அமைப்பு ஒன்று, கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்புக்கும் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டார். இந்து சமயக் குருமார்கள், இந்து மதத் தலைவர்கள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்று பலரும் பங்கேற்றிருந்தனர்.
கலாநிதி ஆறு.திருமுருகன் இந்தச் சந்திப்பில் பங்கேற்று பல தகவல்களை வெளியிட்டார்.
கன்னியா வெந்நீருற்று விவகாரத்தில் தற்காலிகத் தீர்வுதான் காணப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நீண்டகாலமாக இருந்த பிள்ளையார் ஆலயம் மீண்டும் அமைக்கப்படாவிட்டால் பௌத்த அடையாளமாக அந்தப் பிரதேசத்தை மாற்றிவிடுவார்கள். பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் சிங்களத்தில் காட்சிப்படுத்தப்பட்ட குறிப்பில், வரலாறு திரிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. கன்னியா வெந்நீர் ஊற்று சிங்கள மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாற்றை மாற்றியுள்ளார்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும், விஞ்ஞானத்துறையிலும் 70 சதவீதமான சிங்கள மாணவர்கள் கற்கின்றனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பௌத்த மயமாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தவர் அங்கு புத்தர் சிலை வைத்தார். பின்னர் மூன்று சமயங்களுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்து ஆலயமோ, கிறிஸ்தவ ஆலயமோ அங்கு அமைக்கப்படவில்லை. விகாரை கட்டப்பட்டு விட்டது.
மாங்குளத்திலிருந்து இயக்கச்சி வரை பல விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறையைச் சுற்றி விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதகலில் சங்கமித்தை வந்திறங்கிய இடத்தின் பெயரையே மாற்றிவிட்டனர். அந்தப் பகுதியிலுள்ள இந்து ஆலயங்களில் வழிபடமுடியாத நிலை இருக்கின்றது.
நாவற்குழியில் பெரு விகாரை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கென மாதகலில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் சுக்கிலவாரச் சத்திரத்தை இராணுவத்தினர் தங்களுடைய நடைபாதைப் பயிற்சிக்குரிய இடமாகப் பயன்படுத்துகிறார்கள். இதுதொடர்பாக யாராவது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கிறீர்களா?
போர்க் காலத்தில் தரைமட்டமாக்கப்பட்ட ஆலயங்களை மீள அமைப்பதற்கு 5 அல்லது 6 கோடி ரூபா தேவைப்படுகின்றது. பௌத்த ஆலயங்களுக்கு நிதி அள்ளிக் கொடுக்கப்படுகின்றது. இந்து ஆலயங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகக் கூடியது 10 லட்சம் ரூபா மாத்திரமே வழங்க முடிகின்றது.
காங்கேசன்துறை சடையம்மா மடத்துக்கு அருகில் அரசதலைவர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சடையம்மா மடத்தில் விளக்கு எரியவில்லை. மடுவில் ஒருநாள் விளக்கு எரியவில்லையென்றால் நீங்கள் ஏற்பீர்களா? அல்லது விகாரைக்கு இப்படியொரு நிலை ஏற்பட அனுமதிப்பார்களா?
நயினாதீவில் நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு 90 சதவீதமான சைவமக்கள் சென்று வழிபடுகிறார்கள். ஆனால், நயினாதீவுக்குச் செல்லும் படகு முதலில் விகாரைக்குத் தான் செல்கிறது. பௌத்தர்கள் படகில் ஏறினால் என்ன ? ஏறாவிட்டாலென்ன? இதுதான் நிலமை. இதனைக் கூட எங்களால் தடுக்க முடியவில்லை யென்றால் சைவமக்கள் அடுத்து என்ன தான் செய்வது?
இதுபோன்ற பிரச்சினைகளால் தான் நல்லை ஆதீன சுவாமிகள், யாழ்ப்பாணம் சின்மயா மிசன் சுவாமிகள் மற்றும் நாங்களும் இணைந்து எங்கள் கதி இதுதானென இந்தியத் தூதரகத்திடம் மனுக் கையளித்தோம்.
திருகோணமலை கன்னியா விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து எங்களுக்கு ஒரு இடைக்கால உத்தரவைப் பெற்றுத் தந்தமைக்காக உங்களைப் பாராட்டுகின்றோம். ஆனால், இதுவொரு நிரந்தரமான தீர்வா? என்பதில் கேள்வியெழுகிறது.
தனிப்பட்ட வகையில் அறிக்கைகள் விடுவதால் எந்தப் பயனுமில்லை. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி தமிழ்மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் எவ்வாறு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவசரமாகக் கூடி சைவமக்கள் எதிர்நோக்கியுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வேண்டும் – –என்றார் ஆறு.திருமுருகன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறை காட்டவில்லை. ஒரு சில விடயங்களைச் செய்திருந்தாலும், பௌத்த மயமாக்கலைத் தடுக்க காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இவ்வாறு இந்து அமைப்புக்கள் குற்றஞ் சுமத்தியுள்ளன.
நல்லை ஆதீனத்தில் அண்மையில் இந்து அமைப்பு ஒன்று, கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்புக்கும் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டார். இந்து சமயக் குருமார்கள், இந்து மதத் தலைவர்கள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்று பலரும் பங்கேற்றிருந்தனர்.
கலாநிதி ஆறு.திருமுருகன் இந்தச் சந்திப்பில் பங்கேற்று பல தகவல்களை வெளியிட்டார்.
கன்னியா வெந்நீருற்று விவகாரத்தில் தற்காலிகத் தீர்வுதான் காணப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நீண்டகாலமாக இருந்த பிள்ளையார் ஆலயம் மீண்டும் அமைக்கப்படாவிட்டால் பௌத்த அடையாளமாக அந்தப் பிரதேசத்தை மாற்றிவிடுவார்கள். பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் சிங்களத்தில் காட்சிப்படுத்தப்பட்ட குறிப்பில், வரலாறு திரிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. கன்னியா வெந்நீர் ஊற்று சிங்கள மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாற்றை மாற்றியுள்ளார்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும், விஞ்ஞானத்துறையிலும் 70 சதவீதமான சிங்கள மாணவர்கள் கற்கின்றனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பௌத்த மயமாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தவர் அங்கு புத்தர் சிலை வைத்தார். பின்னர் மூன்று சமயங்களுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்து ஆலயமோ, கிறிஸ்தவ ஆலயமோ அங்கு அமைக்கப்படவில்லை. விகாரை கட்டப்பட்டு விட்டது.
மாங்குளத்திலிருந்து இயக்கச்சி வரை பல விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறையைச் சுற்றி விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதகலில் சங்கமித்தை வந்திறங்கிய இடத்தின் பெயரையே மாற்றிவிட்டனர். அந்தப் பகுதியிலுள்ள இந்து ஆலயங்களில் வழிபடமுடியாத நிலை இருக்கின்றது.
நாவற்குழியில் பெரு விகாரை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கென மாதகலில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் சுக்கிலவாரச் சத்திரத்தை இராணுவத்தினர் தங்களுடைய நடைபாதைப் பயிற்சிக்குரிய இடமாகப் பயன்படுத்துகிறார்கள். இதுதொடர்பாக யாராவது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கிறீர்களா?
போர்க் காலத்தில் தரைமட்டமாக்கப்பட்ட ஆலயங்களை மீள அமைப்பதற்கு 5 அல்லது 6 கோடி ரூபா தேவைப்படுகின்றது. பௌத்த ஆலயங்களுக்கு நிதி அள்ளிக் கொடுக்கப்படுகின்றது. இந்து ஆலயங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகக் கூடியது 10 லட்சம் ரூபா மாத்திரமே வழங்க முடிகின்றது.
காங்கேசன்துறை சடையம்மா மடத்துக்கு அருகில் அரசதலைவர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சடையம்மா மடத்தில் விளக்கு எரியவில்லை. மடுவில் ஒருநாள் விளக்கு எரியவில்லையென்றால் நீங்கள் ஏற்பீர்களா? அல்லது விகாரைக்கு இப்படியொரு நிலை ஏற்பட அனுமதிப்பார்களா?
நயினாதீவில் நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு 90 சதவீதமான சைவமக்கள் சென்று வழிபடுகிறார்கள். ஆனால், நயினாதீவுக்குச் செல்லும் படகு முதலில் விகாரைக்குத் தான் செல்கிறது. பௌத்தர்கள் படகில் ஏறினால் என்ன ? ஏறாவிட்டாலென்ன? இதுதான் நிலமை. இதனைக் கூட எங்களால் தடுக்க முடியவில்லை யென்றால் சைவமக்கள் அடுத்து என்ன தான் செய்வது?
இதுபோன்ற பிரச்சினைகளால் தான் நல்லை ஆதீன சுவாமிகள், யாழ்ப்பாணம் சின்மயா மிசன் சுவாமிகள் மற்றும் நாங்களும் இணைந்து எங்கள் கதி இதுதானென இந்தியத் தூதரகத்திடம் மனுக் கையளித்தோம்.
திருகோணமலை கன்னியா விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து எங்களுக்கு ஒரு இடைக்கால உத்தரவைப் பெற்றுத் தந்தமைக்காக உங்களைப் பாராட்டுகின்றோம். ஆனால், இதுவொரு நிரந்தரமான தீர்வா? என்பதில் கேள்வியெழுகிறது.
தனிப்பட்ட வகையில் அறிக்கைகள் விடுவதால் எந்தப் பயனுமில்லை. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி தமிழ்மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் எவ்வாறு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவசரமாகக் கூடி சைவமக்கள் எதிர்நோக்கியுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வேண்டும் – –என்றார் ஆறு.திருமுருகன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை