சுட்டு வீழ்த்தப்பட்டது சிரிய இராணுவ விமானம்!!

சிரியாவில் இராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.


சிரியாவில் 8 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அரசு படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர்.

அதேபோன்று அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான நகரங்களை ரஷ்யாவின் உதவியோடு அரசு படைகள் மீட்டுள்ளன. எனினும் இட்லீப், வடக்கு ஹமா மற்றும் அலெப்போ மாகாணங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன.

அவற்றை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்கு அரசு படை போராடி வருகிறது. குறிப்பாக இட்லீப் மாகாணத்தை மீட்டெடுப்பதற்காக இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து சிரியா மற்றும் ரஷ்யா படைகள் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் இட்லீப் மாகாணத்திலுள்ள கான் ஷேக்கவுன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த இராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை சிரிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.