வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.


அதற்கமைய அவர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை இவ்வாறு அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சுகாதார துறையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு  கால அவகாசம் விடுத்திருந்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், தகுந்த தீர்வு இன்றேல், நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென்றும் தரமற்ற மருந்துப்பொருட்கள் கொள்வனவின் காரணமாக பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதென்றும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.