மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை!
நாட்டின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வேலை நாள்களை குறைத்து வருகின்றன. டிவிஎஸ் லூகாஸ். ஹீரோ, மகிந்திரா, மாருதி சுசுகி, அசோக் லேலண்ட் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பணியில்லாத நாட்கள் என அறிவித்து பொருளாதார மந்த நிலையை உறுதிப்படுத்தி வருகின்றன.
இதுபற்றி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ,மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில், ‘இந்தியாவில் வரும் காலாண்டில் 5 லட்சம் பேர் ஆட்டோ மொபைல் துறையில் வேலை இழப்பார்கள்’ என்ற செய்தியை கிரன் மன்ரல் என்பவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அதை மேற்கோள் காட்டி பதிவிட்டிருக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “இது எச்சரிக்கை சமிக்ஞை. குறிப்பாக இந்தியாவிலேயே ஆட்டோ மொபைல் துறையில் அதிக கவனம் செலுத்திடும் தமிழகத்துக்கும் இது எச்சரிக்கை. மத்திய அரசு ஆட்டோமொபைல் துறையின் வேலைகளைக் காப்பாற்றவும், தொழில்துறையை மேம்படுத்தவும் வேகமாக செயல்பட்டு நிதி ஒதுக்கிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழக அரசுத் தரப்பில் இருந்து வந்த முதல் ரியாக்ஷன் இது என்பதால் மாஃபா பாண்டியராஜனின் கருத்து அதிக கவனம் பெற்றுள்ளது. ட்விட்டரில் பலரும் அமைச்சருக்கு பதில் தெரிவித்து வருகிறார்கள்.
“இது உலகம் முழுதுவதுமே இப்போது ஆட்டோ மொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. அமெரிக்காவிலும் வாகன விற்பனை குறைந்துவிட்டது” என்று சிலர் சொல்ல, “தமிழகத்திலும் அதிக ஆட்டோமொபைல் துறைகள் சார்ந்த வேலைகள் பறிபோகும் அபாயம் உள்ளன. உடனடியாக பிரதமரிடமும், நிதி அமைச்சரிடமும் இதுபற்றி பேசுங்கள்” என்று பலரும் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ட்விட்டர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதுபற்றி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ,மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில், ‘இந்தியாவில் வரும் காலாண்டில் 5 லட்சம் பேர் ஆட்டோ மொபைல் துறையில் வேலை இழப்பார்கள்’ என்ற செய்தியை கிரன் மன்ரல் என்பவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அதை மேற்கோள் காட்டி பதிவிட்டிருக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “இது எச்சரிக்கை சமிக்ஞை. குறிப்பாக இந்தியாவிலேயே ஆட்டோ மொபைல் துறையில் அதிக கவனம் செலுத்திடும் தமிழகத்துக்கும் இது எச்சரிக்கை. மத்திய அரசு ஆட்டோமொபைல் துறையின் வேலைகளைக் காப்பாற்றவும், தொழில்துறையை மேம்படுத்தவும் வேகமாக செயல்பட்டு நிதி ஒதுக்கிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழக அரசுத் தரப்பில் இருந்து வந்த முதல் ரியாக்ஷன் இது என்பதால் மாஃபா பாண்டியராஜனின் கருத்து அதிக கவனம் பெற்றுள்ளது. ட்விட்டரில் பலரும் அமைச்சருக்கு பதில் தெரிவித்து வருகிறார்கள்.
“இது உலகம் முழுதுவதுமே இப்போது ஆட்டோ மொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. அமெரிக்காவிலும் வாகன விற்பனை குறைந்துவிட்டது” என்று சிலர் சொல்ல, “தமிழகத்திலும் அதிக ஆட்டோமொபைல் துறைகள் சார்ந்த வேலைகள் பறிபோகும் அபாயம் உள்ளன. உடனடியாக பிரதமரிடமும், நிதி அமைச்சரிடமும் இதுபற்றி பேசுங்கள்” என்று பலரும் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ட்விட்டர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை