யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிதண்ணீர்ப் பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்பவேலை!
திட்டம் 2000 மில்லியன் ரூபா செலவில்! நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் வீதியில் 06வது மைல் கல்லுக்கும் 09வது மைல் கல்லுக்கும் இடையிலான பிரதேசத்தில், உப்பாறு நீரேரியில், கப்பூதுவெளி_அந்தணத் திடல் பகுதியில் மிகப்பெரிய குளமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இக்குளமானது 06 சதுர கிலோமீற்றர் பரப்புடையதாகவும், 07.50 மீற்றர் உயரம் மற்றும் குளத்தின் அணைக்கட்டு 04 மீற்றர் அகலம் உடையதாகவும் இருக்கும்.
வடமராட்சி நீரேரியிலிருந்து மழைக் காலத்தில் கடலுக்குச் செல்லும் மழைநீர், சாவகச்சேரி-பருத்தித்துறை வீதிக்கும், வல்லை வெளிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வடமராட்சி நீரேரியில், அணை அமைக்கப்பட்டு புதிய துருசும் நிறுவப்பட்டு அங்கு நன்னீர் தேக்கப்பட்டு, விநியோகக் குழாய்கள் மூலமாக 'அந்தணத்திடல்' பகுதியிலுள்ள குளத்துக்கு நீர் இறைக்கப்படுவதுடன், குளத்தில் 04.50 மீற்றர் உயரத்துக்கே இயந்திரம் ஊடாக இறைக்கப்பட்டு நீர் தேக்கப்படும். குளத்துக்கு நேரடியாகக் கிடைக்கும் மழை நீரும் அதனுள் தேக்கப்படும். குளத்தில் சராசரியாக ஆண்டுக்கு 24 எம்.சி.எம். நீர் சேமித்து வைக்கப்படும்.
வடமராட்சி நீரேரியில் மழை நீர் சேகரிக்கப்பட்டு எதிர்காலத்தில் அந்த நீரேரி நன்னீர் நீரேரியாக மாறும் வகையில் திட்டம் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில் பிரதேசத்தில் மங்குரோஸ் தாவரங்கள் அழிவடையும் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்திருந்தது.
தற்போது நீரேரி ஊடாக கடலுக்குச் செல்லும் மேலதிக நீரையே குளத்துக்கு இறைக்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் நீரேரியில் உள்ள நீர் வழமைபோன்றே இருக்கும்.
இத்திட்டத்துக்கான அலுவலகமொன்று சரசாலையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் வீதியில் 06வது மைல் கல்லுக்கும் 09வது மைல் கல்லுக்கும் இடையிலான பிரதேசத்தில், உப்பாறு நீரேரியில், கப்பூதுவெளி_அந்தணத் திடல் பகுதியில் மிகப்பெரிய குளமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இக்குளமானது 06 சதுர கிலோமீற்றர் பரப்புடையதாகவும், 07.50 மீற்றர் உயரம் மற்றும் குளத்தின் அணைக்கட்டு 04 மீற்றர் அகலம் உடையதாகவும் இருக்கும்.
வடமராட்சி நீரேரியிலிருந்து மழைக் காலத்தில் கடலுக்குச் செல்லும் மழைநீர், சாவகச்சேரி-பருத்தித்துறை வீதிக்கும், வல்லை வெளிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வடமராட்சி நீரேரியில், அணை அமைக்கப்பட்டு புதிய துருசும் நிறுவப்பட்டு அங்கு நன்னீர் தேக்கப்பட்டு, விநியோகக் குழாய்கள் மூலமாக 'அந்தணத்திடல்' பகுதியிலுள்ள குளத்துக்கு நீர் இறைக்கப்படுவதுடன், குளத்தில் 04.50 மீற்றர் உயரத்துக்கே இயந்திரம் ஊடாக இறைக்கப்பட்டு நீர் தேக்கப்படும். குளத்துக்கு நேரடியாகக் கிடைக்கும் மழை நீரும் அதனுள் தேக்கப்படும். குளத்தில் சராசரியாக ஆண்டுக்கு 24 எம்.சி.எம். நீர் சேமித்து வைக்கப்படும்.
வடமராட்சி நீரேரியில் மழை நீர் சேகரிக்கப்பட்டு எதிர்காலத்தில் அந்த நீரேரி நன்னீர் நீரேரியாக மாறும் வகையில் திட்டம் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில் பிரதேசத்தில் மங்குரோஸ் தாவரங்கள் அழிவடையும் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்திருந்தது.
தற்போது நீரேரி ஊடாக கடலுக்குச் செல்லும் மேலதிக நீரையே குளத்துக்கு இறைக்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் நீரேரியில் உள்ள நீர் வழமைபோன்றே இருக்கும்.
இத்திட்டத்துக்கான அலுவலகமொன்று சரசாலையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை