தமிழ் இளைஞர்கள் கடத்தல் உட்பட முக்கிய வழக்கு விசாரணை!!

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவம் மற்றும் வசீம் தாஜூதீன், லசந்த விக்ரமதுங்க உட்பட ஆறு உயர் வழக்குகள் தொடர்பான விசாரணை அறிக்கை, பதில் பொலிஸ்மா அதிபரால் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதனை பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை தயாரித்து இந்த மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன் பிரகாரமே வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் கடத்தல், 17 பணியாளர்கள் கொலை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கடந்த 15 ஆம் திகதி பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் குறித்த 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள், பதில் பொலிஸ்மா அதிபரால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.