தென்கிழக்கு பல்கலைகழக மாணவன் மர்ம மரணம்!

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவர் ஒருவர் இன்று அதிகாலை திடீர் மரணமானார்.


பூண்டுலோயா – டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி.துர்கேஷ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த மாணவன் தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கற்று வருகின்றார்.

இன்று அதிகாலை பல்கலைக்கழகத்திலிருந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த மாணவன் மரணமாகியுள்ளார் .

மாணவனின் மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.