கிராம பாதுகாப்பு தொடர்பாக வவுனியாவில் விசேட செயலமர்வு!!

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் கிராம பாதுகாப்பு தொடர்பாக வவுனியாவில் விசேட செயலமர்வொன்று இடம்பெற்றது.


மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த செயலமர்வு இடம்பெற்றது.

இதன்போது கிராம மட்டத்தில் சமூகம் தொடர்பாக முழுமையான மீளாய்வொன்றை செய்து தகவல் தயாரித்தல், வெளிப்புற எதிரிகளினால் கிராமத்திற்கு ஏற்படக்கூடிய சவால்களை நேரகாலத்துடன் அடையாளம் காணும் உளவுத் தகவல்களைத் தொடர்ந்து திரட்டுதல் உள்ளிட்ட 16 செயற்றிட்டங்களை கிராம பாதுகாப்பு செயற்றிடத்தினூடாக முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இத்திட்டங்கள் தொடர்பான முழுமையான விளக்கத்தினை உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி வழங்கினார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிச்செயலாளர், பிரதேச மற்றும் மாவட்ட உதவிச் செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர்நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.