கௌரவ ஆளுனர் அகௌரவமாக நடந்து கொள்வது வெறுக்கத்தக்கது!!

அவரின் ஒழுங்கு படுத்தலில் அமையப் பெற்ற பொத்தகக் கண்காட்சியிலும் மிகவும் நுட்பமாக தமிழருக்கு எதிரான செயற்பாடு அரங்கேற்றப்படுகிறது.


வந்தவுடன் பௌத்த மானாட்டைக் கூட்டினார் தற்போது புலி எதிர்ப்பு அதாவது இத்தனை வருடங்களாகக் கண்ணீரிலும் செந்நீரிலும் போராடிய இனத்தின் விடுதலைசார் கருத்தைக் கொச்சப்படுத்தும் பொத்தகங்களை விற்பனை செய்து அதை தமிழர்களே வாங்கிப்படித்து எமது போராட்டத்தையும் நியியாத்தையும் தவறாக விளங்கிக்கொள்ள வகைசெய்கின்றார்

ஒரு இனத்தின் இருப்பில்தான்
அதன் விருப்பு நிறைவுபெறும்
ஒரு இனத்தின் நிறைவேறா விருப்புக்களால்தான்
அதன் இருப்புக்கான போரும் தேடலும் தேவையாக உள்ளது என்பதை ஆளுனர் புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு இனத்தின் இருப்பு என்பது தனியே வாழ்ந்து கொண்டிருக்கும் இனத்தின் சுதந்திரம் சார் வசதிகளுடன் கட்டமைக்கப் படுவதில்லை
கட்டமைக்கப்பட்ட இருப்பை
அடுத்த சந்ததிக்க சமர்ப்பிப்பதுமாகும்
என்பதை யாவரும் விளங்க வேண்டும்

இருப்பையும் விருப்பையும்
இலக்கிய மற்றும் தொல்பொருள் மூலாதாரங்கள் நிர்ணயிக்கின்றது
அதிலும் இலக்கிய மூலாதாரம் மாபெரும் பங்காற்றுகிறது

ஒரு மனநோயாளி எழுதிய மகாவம்சத்தால் நமக்கு எவளவு பிரச்சினை எவளவு ரத்தம் எவளவு கொலை எவளவு தொல்லை எவளவு தொல்லை

அதுபோல் இன்றும் தொல்லை தரும் தமிழர்களுக்கு எதிரான பொத்தகங்கள் மிகத் தந்திரமாக வளர்ந்து வரும் இளம் சந்ததிகளிடம் கையளிக்கப் படுகிறது

யாழ் நூலகத்தை எரிப்பதும்
யாழில் விளையான வரலாறு சுமந்த பொத்தகங்களை விற்பதும் ஒன்றே

எனவே இனியும் தமிழர்களுக்கு எதிரான பொத்தகங்களை விற்பதும்
அதை நாமே வாங்கி வாசிப்பதும் நிறுத்தப்படல் வேண்டும்

ஏனெனில் நாம் அதிகம் எந்தப் பொத்தகங்களை வாசிக்கின்றோமோ
அந்தப் பொத்தகங்களாக மாறிவிடுகின்றோம்

விழிப்பே விடுதலைக்கு முதற்படி என்பதை நெஞ்ஞசில் எழுதுவோம்

குறிப்பு-இந்தப் பதிவை பார்ப்பவர் தயவு செய்து பொத்தகத்தை தேடாதீர்கள் ஆளுனரின் மனநிலையையும் தமிழர்மீது தொடக்கப்படும் நுண்ணிய யுத்தத்தையும் புரிந்தால் சரி

த.செல்வா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.