கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்குச் சென்ற பேராயர் ஜஸ்டின் வெல்பி!

அங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ள பேராயர் ஜஸ்டின் வெல்பி பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு விஜயம் செய்துள்ளார்.


இன்று(வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் அவர் அங்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவரை வரவேற்றுள்ளார்.

இதனையடுத்து, பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆண்டகை, சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தியிருந்தார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட பேராயர் ஜஸ்டின் வெல்பி, குண்டுத் தாக்குதல் குறித்த செய்தியை கேட்டு தாம் பெரும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சொல்லமுடியாத வேதனைக்கு தாம் ஆளானதாகவும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்திக்க கிடைத்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.