மாணவர்களை மிரட்டி கப்பம் பெற்றவர்கள் கைது!

மாவனெல்ல நகரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் பணம் பறித்த போதைப்பொருள் குழுவொன்றை பொலிசார் கைது செய்து, பின்னர் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.


20 வயதுக்குட்பட்டவர்களை கொண்ட குறித்த குழுவினர், தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் மிரட்டி கப்பம் பெற்று வந்துள்ளனர் .

அத்துடன் அவர்கள் மாணவிகளை பாலியல் சேட்டைகளிற்கும் உள்ளாக்கியுள்ளனர்.

இந்நிலையில் வெலிமமன, இஹல மவேல, ஹகுருகம்மன, தேஹிமாடுவ மற்றும் நிகாபிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவனெல்லா பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த வருடம் கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் ஒருவரும் அந்த குழுவில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.