பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கிறது தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.


மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பரப்புரை கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் அனைத்து உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகள், மாவட்ட ரீதியிலான கலந்துரையாடல்கள் மற்றும் மக்கள் சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இடதுசாரிக் கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.