பேராயர் ஜஸ்ரின் வெல்பெ இலங்கைக்கு விஜயம்!!

கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.


அதற்கமைய அவர் இன்று (வியாழக்கிழமை) இலங்கையை வந்தடையவுள்ளார். பேராயரின் விஜயம் ஒருமைப்பாட்டிற்கான விஜயமாகவே அமையும் என இலங்கை திருச்சபையின் ஆயர் டிலோராஜ் ஆர் கனகசபை ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இலங்கை வரும் இவர், ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஆயர் குறிப்பிட்டார்.

இன்று இலங்கை வரும் கன்டபெரியின் பேராயர், சனிக்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.

இன்று மாலை சர்வ மதத் தலைவர்களை சந்தித்து பேராயர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்குச் செல்லும் கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பெ, குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் காயப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்தோடு இந்த விஜயத்தின்போது கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் பேராயர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்கர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் பேராயர் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.