முதல் முறையாக பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஒருவருக்கு எதிராக வழக்கு!!

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக கொழும்பு முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரகோனுக்கு எதிராக சட்டமா அதிபர் தப்புல டி லிலேரா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


தாஜூடீனின் உடல் பாகங்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அறிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஒருவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.